யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி!!
கோவை:பண்டைய இந்தியாவின் மறக்கப்பட்ட பெண் ஞான மரபான யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி மற்றும் அரிய ஆவணப்படத் திரையிடலுடன் கோவையில் இன்று துவங்கியது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கொச்சியில் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த முக்கியமான கலாச்சார முயற்சி, கோவையில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக்கூடத்தில் ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. புகழ்பெற்ற கலைஞரும், கலைத் துறைத் தலைவரும், எழுத்தாளருமான டாக்டர் பீனா உன்னிகிருஷ்ணன், ‘ஏகா – தி ஒன்: 64 யோகினிகளின் பயணம்’ என்ற தலைப்பில் தனது பத்து ஆண்டுகால ஆய்வு மற்றும் படைப்புகளை இக்கண்காட்சியின் மூலம் முன்வைக்கிறார். 16 மாநிலங்களை கடந்து சுமார் 10,000 கிலோமீட்டர் பயணத்தை உள்ளடக்கிய 81 நாள் தேசிய கண்காட்சி இதுவாகும். இதில், பண்டைய இந்தியாவில் போற்றப்பட்ட 64 யோகினிகளை பிரதிபலிக்கு...