அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்!!
கோவை: ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமேனி அவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கோவை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவை உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். "அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுவோம்! உலக அமைதிக்காக குரல் கொடுப்போம்!" என்ற முழக்கத்துடன், பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு முன்னின்று நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு சிறப்பம்சமாக, ஏராளமான இஸ்லாமியப் பெண்களும் இதில் பங...