உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் ESG நடைமுறைகள்: கோவையில் 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு!!
கோவை : இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் (ICMAI), தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் மாநாடு (NCMAC 2026) ஆனது கோவையில் ஜனவரி 9 – 11 தேதிகளில் நடக்கிறது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ NCMAC 2026, “RISE India – இந்தியாவையும் CMA உறுப்பினர்களையும் மறுநிலைப்படுத்தல், வளர்ச்சியை தீவிரப்படுத்தல், திறனை வலுப்படுத்தல் மற்றும் திறன்களை மேம்படுத்தல்” என்ற உட்கருத்தில் நடைபெறுகிறது. “விக்சித் பாரத் 2047” என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் அங்கமான: அடக்கவிலை போட்டித் திறனை வலுப்படுத்துதல், உற்பத்தித் திறனை உயர்த்தல், சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுமை நிலைத்தன்மை (ESG) மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துதல், தொழிற்புரட்சி 5.0, உலகளாவிய ஆலோசனை சூழல் மற்றும் ...