தேசிய வருவாய் வழி திறனறிதல் உதவித்தொகைத் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் தொடக்கம்!!
கந்தர்வகோட்டையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறிதல் உதவித்தொகைத் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் தொடக்கம். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.சின்னதுரை அவர்கள் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஸ்டாலின் நாராயணசாமி பயிற்சி மையம் இணைந்து நடத்தும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான என்.எம்.எம்.எஸ் என்று அழைக்கப்படும் தேசிய வருவாய் வழி திறன் உதவித்தொகை பெறும் தேர்விற்கான பயிற்சி முகாம் தொடக்க விழா டிச 26 அன்று நடந்தது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் கு.துரையரசன் தலைமை வகித்தார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ என்.எம்.எம்.எஸ் தேர்வு தமிழ்நாடு அரசால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்வு பெறும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ...