டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியுடன் மேம்படுத்தப்பட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்தனர!!
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியுடன் மேம்படுத்தப்பட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை (16.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் (16.12.2025) அன்று ரிப்பன் வெட்டியும்,குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வந்த காவல் கட்டுப்பாட்டு அறை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் முதற்கட்டமாக புதிதாக நவீன காவல் கட்டுப்பாட்டு அறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் எல்லை சோதனைச் சாவடிகளான 1.கோடாங்கிபட்டி, 2.வேம்பார், 3.தோட்டிலோவன்பட்டி, 4.பருத்திகுளம், 5.செய்துங்கநல்லூர் 6.இடைச்சிவிளை ஆகிய 6 சோதனைச் சாவடிகளில் ANPR (Automatic Number plate Recognition) எனப்படும் வாகன எண்களை தானியங்கி முறையில் துல்லியமாக புகைப்படம்...