கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு!!
தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் தாயுமானவர் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தாயுமானவர் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பொதுமக்களின் கோாிக்கை மனுக்கள் மீது விரைவாக நல்ல முறையில் தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். ஆய்வின் போது வருவாய் வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலர் ஞானராஜ், சமூகபாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேஸ்வரி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில்குமார், மாநகர விள...