மார்ச் 8 முதல் 14 வரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனையுடன் அறுவை சிகிச்சைக்கு 10 சதவீத கட்டண சலுகை
கோவை,ஆர்.எஸ் புரம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் உலக குளுக்கோமா வாரம் முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுவதுடன் அறுவை சிகிச்சைக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கண் மருத்துவத்தில் கடந்த 46 ஆண்டுகளாக சேவை செய்து வரும் தி ஐ பவுண்டேஷன் குழுமம் தென்னிந்தியாவில் 27 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் குளுக்கோமா விழிப்புணர்வு குறித்து கோவை ஆர்.எஸ் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. குளுக்கோமா அல்லது கண் அழுத்த நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக குளுக்கோமா சங்கத்தின் முயற்சியாக ஆண்டுதோறும் உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நோய் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அவ்வப்போது கண் பரிசோதனை மிகவும் அவசியம் என மருத்துவ...