மாடு,ஆடு,பறவைகள்,விலங்குகள் உண்ணும் இடமாக மாறி உள்ளது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை குப்பக் கிடங்கு மேல் இடத்தில் பராமரிப்பின்றி சரிவர சுத்திகரிப்பு இல்லாமல் ஆடு மாடு போன்ற விலங்குகள் உணவு தேடும் இடமாக மாறி உள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த விலங்குகள் பிளாஸ்டிக் பொருட்கள்,கழிவு பொருட்களை உட்கொள்வதால் அப்பகுதியில் விலங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனைக் கண்டு வால்பாறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் ஆணையர்கள் நடவடிக்கை எடுத்தால் தொற்றுநோய் பரவாமல் தடுக்கலாம். வால்பாறை நகர்ப்புற பகுதிகளில் ஆடு மாடுகள் சுற்றி திரிவதினால் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் இடையூராக உள்ளது. ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே அப்பகுதியில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். நாளைய வரலாறு செய்திகளுக்காக செய்தியாளர் -திவ்யக்குமார்.