கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் ; சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது!!
கோவை: சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது 'ஷெல் ஈக்கோ-மேரத்தான்' ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள் அல்லாது நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் போட்டியாகும். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த போட்டியில், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 14 மாணவர்களை கொண்ட அணியான 'டீம் ரிநியூ', ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் தங்களின் புதிய முன்மாதிரி வாகனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அணியே இப்போட்டியின் ஹைட்ரஜன் எரிபொருள் பிரிவில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இவர்களின் அறிமுகமும், இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்வு குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நட...