கந்தர்வகோட்டை ஒன்றியதில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிப்பு...
கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், உலக மகிழ்ச்சி தினம், உலக கதை சொல்லும் தினம் உள்ளிட்ட முப்பெரும் தினம் கடைப்பிடிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், உலக மகிழ்ச்சி தினம், உலக கதை சொல்லும் தினம் உள்ளிட்ட முப்பெரு தினங்கள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது உலக சிட்டுக்குருவி தினம் அழிந்து வரும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ஆண்டுதோறும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2010 முதல் கொண்டாடப்படும் இந்நாளில், நகரமயமாக்கல், கதிர்வீச்சு மற்றும் வாழ்விட இழப்பால் அழியும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாளைய வரலாறு ...