கோவையின் உயிர்நாடியான நொய்யல் நதி புனரமைப்பை அனைவரும் ஒன்றிணைந்து வேகப்படுத்த வேண்டும் - சிறுதுளி அமைப்பு கோரிக்கை!!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சிறுதுளி, நொய்யல் நதி மற்றும் அதனை சார்ந்த நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வெல்லியங்கிரி மலை பகுதியில் தோன்றி சுமார் 170 கி.மீ. நீளத்தில் பாயும் நொய்யல் நதி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மாசுபாடு, ஆக்கிரமிப்பு மற்றும் நீரோட்டக் குறைவு போன்ற சவால்கள் காரணமாக பாதிக்கப்பட்ட நொய்யல் நதியை மீட்டெடுக்க கடந்த 23 ஆண்டுகளாக சிறுதுளி ஒருங்கிணைந்த அணுகுமுறையில் செயல்பட்டு வருகிறது. நதி, நீரோடைகள், தடுப்பணைகள் மற்றும் பாசன வாய்க்கால்களை இணைத்து புனரமைக்கும் இந்த முயற்சிகள் மூலம் சாடிவயல், மசோரம்பு நீரோடை, முண்டந்துறை, புதுக்காடு மற்றும் குனியமுத்தூர் அணைகள் உள்ளி...