இந்தியாவில் முதன்முறையாக செவிலியர்களுக்கான சர்வதேச 'டெய்சி' விருது! கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை
கோவை: செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை சர்வதேச அளவில் கௌரவிக்கும் உலகப் புகழ்பெற்ற டெய்சி விருதுகள்' (DAISY Awards for Nursing Excellence) திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை, கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள Royal Care Super Speciality Hospital பெற்றுள்ளது.பல சர்வதேச தரச்சான்றுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ள ராயல் கேர் மருத்துவமனை, DAISY Foundation உடன் இணைந்து இந்த விருது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த முயற்சி, இந்தியாவில் செவிலியர் சேவைகளை அங்கீகரிக்கும் புதிய தேசிய தரத்தைக் குறிக்கிறது.செவிலியர்களின் அர்ப்பணிப்பை போற்றும் சர்வதேச விருது 'டெய்சி விருது' என்பது நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்யும் செவிலியர்களை கௌரவிக்கும் சர்வதேச அங்கீகாரமாகும். நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் பகிரும...