ஆபத்தின் விளிம்பில் பூதப்பாண்டி சிவகாமிபுரம் புளியமூட்டு தரைபாலம் பெரும் அச்சத்தில் பொதுமக்கள்!!

கன்னியாகுமரி மாவட்டம்,தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டி பிளாக் ஆபிஸ் சமீபம் சிவகாமிபுரம் தெருவில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் உள்ளது. அது மட்டுமன்றி பிளாக் ஆபிஸ் அருகிலுள்ள சிவகாமிபுரம் தெருவில் நிறைய வீடுகள் நிறைந்துள்ளன. இந்த சிவகாமிபுரம் தெருவிற்கு பூதப்பாண்டி பிளாக் ஆபிஸ் சமீபம் உள்ள தரைபாலத்தை கடந்துதான் செல்லவேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தரைப்பாலம் இரண்டு பக்க சுவர்கள் விரிசலடைந்து கற்கள் பெயர்ந்து தரைப்பாலம் எப்போது வேண்டுமானாலும் விழலாம். இதனால் குழந்தைகள், வயதானவர்கள், பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

ஆண்டுகள் பல கடந்தும் தரைபாலம்,தெருவும் பராமரிப்பின்றி காணப்படுவதால் ஆபத்து சூழுமுன்னே சம்மந்தப்பட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பூதப்பாண்டி பிளாக்ஆபிஸ் சிவகாமிபுரம் செல்லும் வழியிலுள்ள புளியமர பக்கத்திலுள்ள தரைபாலத்தை செப்பனிட்டும் மேலும் சிவகாமிபுரம் தெருவில் புதிதாக காங்கிரீட் சாலை அமைத்துதர நடவடிக்கை மேற்கொள்ள பூதப்பாண்டி சிவகாமிபுரம் பொதுமக்கள் சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கிறார் சமூக ஆர்வலர்  எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

-M.சுரேஷ் குமார்.

Comments