வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் காலி மது பாட்டில்கள் உட்பட்ட குப்பை கழிவுகளை கொட்டும் மர்மநபர்கள்!!

 

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை மலையடிவாரத்தில், வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் பிளாஸ்டிக் பை, காலி மது பாட்டில்கள் கொண்ட குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.

கோவை புறநகர், வடக்கு பகுதியில் மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். குறிப்பாக, தண்ணீர், உணவு தேடி, யானைகள் உட்பட வனவிலங்குகள், மலையோர கிராமங்களை தேடி வருவது அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், வனவிலங்குகள் நுழைவதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வனவிலங்குகளின் பாதுகாப்பு பட்டியலில் உள்ள காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவற்றை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 'அவுட்டுக்காய்' எனப்படும் நாட்டு வெடிகுண்டை, சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். மலையோர கிராமங்களில் வைக்கப்படும் அவுட்டுக்காயை, தெரியாமல் உண்ணும், யானைகளின் நாக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகள் சிதறி, உணவு உண்ண முடியாமல், ஒரு சில நாட்களில் பரிதாபமாக உயிரிழக்கின்றன; பல விலங்குகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

இதே போல, வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழையும் நபர்கள், மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அங்கே உடைத்து வீசி செல்வதால், வனவிலங்குகள் காயம் அடைந்து, உயிர் இழக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அவுட்டுக்காய், நாட்டு துப்பாக்கி உட்பட பல்வேறு வகைகளில், வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என, வனத்துறையினர், மலையோர கிராமங்களில், சில நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், உடனடியாக அருகேயுள்ள வனத்துறை அலுவலகத்தில் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கும்படி, மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலமலை அடிவாரம், வனத்துறை சோதனை சாவடி அருகே, பிளாஸ்டிக் பை, காலி மது பாட்டில்கள் கொண்ட குப்பை கொட்டப்பட்டு உள்ளன. இதுகுறித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'யானை உட்பட வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், வனத்துறை சோதனை சாவடி அருகே குப்பை, காலி மது பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கையை, வனத்துறையினர் கண்காணித்து, மர்ம நபர்கள் மீது  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments