லாரி உரசியதில் பைனான்சியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி!


ஒட்டப்பிடாரம் அருகே  கீழமங்கலம்  கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் லாரி உரசியதில்  உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே பலி! ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை.!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் செல்லத்துரை (60) என்பவர் பைனான்ஸ்  தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி மற்றும் இரு ஆண் ஒரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். 

இந்நிலையில் செல்லத்துரை ஓட்டப்பிடாரம் பஜாரில் பைனான்ஸ் பணத்தை வசூலித்து விட்டு  ஓட்டப்பிடாரம் பாரத ஸ்டேட் பேங்க் எதிரே பஜாரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது லாரியின்  பக்கவாட்டில் இருசக்கர வாகனம் உரசியதில் தடுமாறி விழுந்த செல்லத்துரை மீது லாரியின் பின்பக்க டயர் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த செல்லத்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் சம்பவம் குறித்து லாரியை ஓட்டி சென்ற தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த முருகன்  (55) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments