வால்பாறை நடுமலை சாலையில் புதிதாக உருவாகி வரும் குப்பை மேடால் துர்நாற்றம் வீசும் அவல நிலை!!!

 

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியை அடுத்துள்ள நடுமலை செல்லும் சாலை ஓரத்தில் அதிக அளவு குப்பைகள், கழிவு பொருட்கள், கோழி இறைச்சி கழிவுகள் போன்றவற்றை கொட்டி புதியதாக ஒரு குப்பை மேட்டை உருவாக்கி உள்ளார்கள். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த குப்பை மேட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசுகிறது இதனால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் குப்பை கழிவுகள் மழை நீரினால் அடித்து வரப்பட்டு ரோட்டில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது இது பற்றி பலமுறை புகார் அளிக்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே குப்பை கழிவுகளை பொதுவெளியில் கொட்டாமல் அதற்கென உள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள பெட்டிகளில் மட்டும் போடுமாறும் மற்ற இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments