புதிய காற்றழுத்த தாழ்வு! டிச.1முதல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

 

-MMH

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தென் மாவட்டங்களை நோக்கி வரக்கூடும்.28.11.2020 மற்றும் 29.11.2020 : தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,30.11.2020: தென் மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர,

மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,01.12.2020: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச,

வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை விவரம் (சென்டிமீட்டரில்) மேட்டுப்பட்டி (மதுரை) 9, அவிநாசி (திருப்பூர்) 8, வாடிப்பட்டி (மதுரை), சோழவந்தான் (Madurai) தலா 7, ஆண்டிபட்டி (தேனி), வத்ராயிருப்பு (விருதுநகர்), திருப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 6 .மீனவர்களுக்கான எச்சரிக்கை நவம்பர் 28: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும்,

வீசக்கூடும்நவம்பர் 29: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் , தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ,ல வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ, வேகத்திலும் வீசக்கூடும்நவம்பர் 30: தெற்கு வாங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு வாங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்டிசம்பர் 01: தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், 

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்டிசம்பர் 02: தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள். மாலத்தீவு மற்றும் லத்தச்சத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்இதனால், மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments