இலவச 5ஜி வைஃபை முதல் முறையாக மதுரையில்!!

 

-MMH

மதுரை சிம்மக்கல் பகுதியில் தமிழ்நாட்டில் முதல் முறையாக 5ஜி தொழில் நுட்பம் கொண்ட இலவச அதிவேக வைஃபை வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டது. இந்த அதி நவீன பேருந்து நிலையத்தை மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பி.டி.தியாகராஜன் திறந்துவைத்தார்.

இந்த பேருந்து நிலையத்தில் பயணங்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் செவிக்கு இனிமையாக மெல்லிசை கேட்கும் வகையில் வசதிகள், மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் சாய்தள வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்தில் 24 மணிநேர கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மின் விசிறி, விளக்குகள் சூரிய மின் சக்தியில் இயங்கும்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநிலத்திலே முதல் முறையாக இங்கு 5 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய வைஃபை சேவை நிழல் குடை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-பாரூக் சிவகங்கை.

Comments