நிவர் புயலின் வெளிச்சுற்று கடலூரில் கரையை தொட்டது!!
நிவர் கோயிலின் வெளிச்சுற்று கடலூரில் கரையை தொட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, புயலின் முக்கிய பகுதியான மையப்பகுதி கரையைத் தொட இன்னும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும் என்று அறிவித்துள்ளது.
நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மையம் தகவல்புயலின் பாதையில் தற்போது வரை மாற்றம் இல்லை. நிவர் புயல் காரணமாக இன்று பிற்பகல் முதல் கடலில் அலைகள் 23 அடி வரை உயரும். புதுச்சேரி அருகே இன்று இரவு 8 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கும்.புயல் கரையை கடந்த பிறகும் அது கடக்கும் பகுதிகளில் அதன் தாக்கம் 6 மணி நேரம் தொடரும் என கூறப்பட்டு உள்ளது,
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன்,தஞ்சாவூர்.
Comments