இந்திய அரசியலமைப்பு பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
இந்திய அரசியலமைப்பு புத்தகம் உருவானது குறித்த
சுவாரஸ்யமான உண்மைகள் இந்தத் தொகுப்பில் காணலாம்.
71வது (நவம்பர் 26ம்) இந்திய அரசியமைப்பு நாளாகும்.
1949ம் ஆண்டு இதேநாள்தான் இந்திய அரசியலைப்புப் புத்தகம்
தனது முழு வடிவத்தை பெற்றது.
இந்திய அரசியலமைப்பு நாள், தேசிய சட்ட தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
1.உலகில் உள்ள அனைத்து நாடுகளுள்,
மிக நீளமான அரசியலமைப்பு இந்தியாவுடையது ஆகும்.
இதில் 448 ஆர்டிகில்ஸ் மற்றும் 25 பாகங்கள் கொண்டுள்ளது.
2.இந்திய அரசியலமைப்பின் மூலப் புத்தகமானது பிரேம் பெஹாரி நரைன் என்பவரால் கைப்பட எழுதப்பட்டதாகும். அவர், இதை இட்டாலிக் ஸ்டைலில் எழுதி இருந்தார். மேலும், அந்த அசல் புத்தகமானது நிறைய கலையம்சங்களால் அலங்கரிக்கப்பட்டு, இந்திய பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
3.இந்திய அரசியலமைப்பு மூலப் புத்தகம் இந்தி, மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
4.ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனைச் சேர்ந்த கலைஞர்களால் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் எல்லா பக்கங்களும் அலங்கரிக்கப்பட்டது.
5.இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை உருவாக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆனது.
6.நவம்பர் 26, 1949ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை பூர்த்தி செய்து முடிக்கும் முன்னர்,
பல விவாதங்கள், கலந்தாய்வுகளுக்கு பின்னர் 2000 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
7.1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் முழுமையான இந்திய அரசியலமைப்பு புத்தகம் தயாரான போதிலும், இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட 2 மாதங்கள் ஆனது.
1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு வெளியானது, அதுவே நமது குடியரசு தினமாகத் திகழ்கிறது.
8.இந்திய அரசியலமைப்பு புத்தகம் வெளியாவதற்கு 2 தினங்களுக்கு முன்னர் ஜனவரி 24, 1950 அன்று அப்போதைய சபை உறுப்பினர்களான 284 பேர் மூல அரசியலமைப்புப் புத்தகத்தில் கையொப்பம் இட்டனர். இதில் 15 பெண்களும் அடங்குவர்.
9.அரசியலமைப்புப் புத்தகத்தில் உள்ள ஐந்தாண்டுத் திட்டமானது
(FYP) சோவியத் யூனியனைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும்.
மேலும், சமூக பொருளாதார உரிமை அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து தழுவி உருவாக்கப்பட்டதாகும்.
10.Liberty, Equality, Fraternity, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகள் நமது இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பிரபலமான சொற்கள் ஆகும். இது பிரெஞ்சு அரசியலமைப்பில் இருந்து தழுவி சேர்க்கப்பட்டது.
11.மேலும், இந்திய அரசியலமைப்பு புத்தகம் we the people என்ற வாசகத்துடன் ஆரம்பமாகும், இந்த சொற்றொடர் அமெரிக்க அரசியலமைப்பு புத்தகத்தில் இருந்து தழுவப்பட்டது ஆகும்.
12.கடந்த ஜனவரி 2020ம் ஆண்டு வரையிலும் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் 104 திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
-பாரூக் சிவகங்கை.
Comments