திருமணமான பிறகு தாலியை கழற்றி கணவனுக்குக் கொடுத்து விட்டு காதலனுடன் சென்ற இளம் பெண்!!

 -MMH 

     கேரளா மாநிலம் திருசூரில், திருமணமான பிறகு, கணவருடன் மணப்பெண் செல்லும் போது , அவளது காதலனும் அவரது நண்பர்களும் சேர்ந்து காரை நிறுத்தினர். அந்த இளம் பெண் தன் தாலியை கழற்றி கணவனுக்குக் கொடுத்துவிட்டு காதலனுடன் சென்றுவிட்டாள். பெண்ணின் குடும்பத்தார் தங்க நகைகளை திருப்பி வாங்கினர். இந்த சம்பவம் திருசூர் தேசமங்கள பஞ்சாயத்தில் உள்ள கடுகாசேரியில் நடந்தது.

கடுகாசேரியைச் சேர்ந்த மணமகள் குடும்பத்தின் விருப்பப்படி புத்துசேரியைச் சேர்ந்த ஒரு இளைஞனை மணந்தாள். திருமணத்திற்குப் பிறகு மணமகனின் வீட்டிற்கு செல்லும் வழியில், அவளுடைய காதலனும் நண்பர்களும் காரை வெறிச்சோடிய இடத்தில் தடுத்து நிறுத்தினர். பின்னர் தாலியை தனது கணவரிடம் கொடுத்து வெளியே இறங்கிய  மணமகள் தனது காதலனுடன் சென்றுவிட்டாள்.

கணவரின் புகாரைத் தொடர்ந்து, செருதுருத்தி போலீசார் அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் ஸ்டேஷனுக்கு அழைத்தனர். உறவினர்கள் தலைமையில் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, மணமகள் தனது காதலனின் குடும்பத்தினருடன் நகைகளை கழற்றிவிட்டு அழைத்துச் செல்லப்பட்டாள். கணவரின் குடும்பத்தின் திருமண செலவுகளுக்கு இழப்பீடாக மணமகளின் தந்தை ரூ 2.5 லட்சம் செலுத்தியதை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

-நம்ம ஒற்றன்.





Comments