இன்று முதல் சென்னையில் மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி!!.. தெற்கு ரயில்வே!

  -MMH
      
    சென்னையில் இன்று முதல் மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 'பீக் ஹவர்ஸ்' என்று அழைக்கப்படும் காலை மற்றும் மாலையில் முக்கியமான நேரங்களில் பயணிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக தெற்கு ரயில்வே தினசரி 244 சென்னை புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கப்படுகிறது. இது கொரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட ரயில்களில் ஏறக்குறைய 40% இயக்கப்படுகிறது

இன்று முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள்முழுவதும் பயணிக்கலாம்.

சாதாரண நேரங்கள் என்பது காலை 7 வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், மாலை 7.30 மணிக்கு பிற்பாடு உள்ள நேரங்கள் ஆகும். இந்த நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம். இந்த குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு ரயிலில் பயணிக்கலாம்.

அத்தியாவசிய பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதாவது காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-Vருக்மாங்கதன்,சென்னை.

Comments