கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் கோலாகல கொண்டாட்டம்!!

 

-MMH

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் எங்கும் உள்ள கிறித்தவ  மக்களால் டிசம்பர் 25ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட கொண்டாடப்படுவது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு கொரணா பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தடையை மீறி மக்கள்  மகிழ்ச்சியுடன் கோலாகலமாக ஆரவாரமாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர் .சிறப்பு திருப்பலி பெரும்பாலான தேவாலயங்களில் நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை புத்தாண்டு  உடன் சேர்த்து 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். 

கிறிஸ்து பிறப்பு விழாவான கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் முக்கியமான திருநாள். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும்  வீடுகளில் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல் என கடந்த 15 நாட்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடந்தன.

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று அனைத்து தேவாலயங்களிலும் நாள் முழுவதும் விசேஷ பிரார்த்தனைகள், ஆராதனைகள், திருப்பலிகள் நடந்தன. புத்தாடை அணிந்து ஆலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் அல்லாதவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் நேற்று நள்ளிரவு முதலே நண்பர்களிடமும், சொந்தகளிடமும் வாழ்த்து செய்திகள் பகிர ஆரம்பித்துவிட்டனர். மால்கள், திரையரங்குகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கிறிஸ்துமஸுக்காக சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தன. பல இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்கள் காணப்பட்டன. சிறியவர் முதல் பெரியவர் வரை கேக் உண்டு, அருகிலுள்ள தேவாலயங்களுக்குச் சென்று பிரார்தித்து வந்தனர். ஏசு பிரானை போற்றி பாடல்கள் பாடப்பட்டன.

முக்கியமான தேவாலயங்களில் இரவு 11.30 மணிக்கு திருப்பலி தொடங்கி இன்று  அதிகாலை  வரை தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் திருப்பலிகள் நடத்தப்பட்டன.  வேளாங்கண்ணி திருப்பேர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமின்றிஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  சரியாக நள்ளிரவு 12 மணிக்கு  ஆலயங்களின் மணிகள் ஒலித்தன. அப்போது, திருப்பலி நடத்தும் பாதிரியார்கள் இயேசுநாதர் உலகில் அவதரித்தார் என்பதை குறிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை திருப்பலியில் கலந்து கொண்டோருக்கு காண்பித்தனர்.

பின்னர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை அங்கிருந்து எடுத்து வந்து குடிலில் வைத்து குடிலை புனிதம் செய்தனர். கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியும் நேற்றிரவு நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பேராலயம், ஞானம் நகர் புனிதப் பேராலயம், மேரிஸ் கார்னர் அருகில் உள்ள திரு பேராலயம், மாதா கோட்டையிலுள்ள  ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது . தஞ்சை மாவட்டத்தில் உள்ள 

அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவில் வழிபாடு நடத்தப்பட்டதால் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி  இரவு ரோந்து பணிகளும் வழக்கத்தைவிட கூடுதலாக இருந்தது. இரவு கடும் குளிரையும் பொருட்படுத்தாது கொரானா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது பக்தர்கள் திரளாக அனைத்து ஆலயங்களிலும் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது .

இந்த பண்டிகையானது  கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகையாக இருக்கிறது என கலந்துகொண்ட கிறிஸ்தவரல்லாத மக்கள் தெரிவித்தனர். வருகின்ற புத்தாண்டு நல்ல விதமாக அமைய வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையும் ஆகும்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.


Comments