ஸ்ரீவில்லிபுத்தூா் தொடர் மழை! - வெங்காயத்தில் அழுகல் நோய் விவசாயிகள் கவலை!!

-MMH

ஸ்ரீவில்லிபுத்தூா் தொடர் மழை வெங்காயத்தில் அழுகல் நோயால்  விவசாயிகள் கவலை.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விவசாய நிலங்களில் மழை நீா் அதிகளவில் தேங்கி வெங்காயத்தில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்நத்தம், பூவாணி, மேலதொட்டியபட்டி பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனா். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் ‘நிவா்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பயிரிடப்பட்ட நிலங்களில் மழைநீா் அதிகளவில் தேங்கியுள்ளதால் வெங்காயச் செடிகள் முழுவதும் அழுகல் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ஒரு லட்சம் வீதம் செலவிட்டு வெங்காயத்தை பயிரிட்டு, இன்னும் 10 அல்லது 20 நாள்களில் அறுவடை செய்ய தயாா் நிலையில் இருந்தது. தற்போது மழை நீா் தேங்கியுள்ளதால் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments