ஞாயிறு முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்காது! - விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை!! - தமிழக அரசு எச்சரிக்கை!!

     -MMH
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், ஞாயிறு முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, +2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேநீர் , பலசரக்கு , உணவகம் , வணிக வளாகங்கள் , ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் . சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல அனுமதி இல்லை . உள்ளூர் , வெளியூர் பயணிகள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

திருவிழா , குடமுழுக்கு நடத்தக்கூடாது . குடமுழுக்கு நடத்த ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் . இ - காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிறுக்கிழமைகளில் அனுமதி இல்லை .

திரையரங்குகள் ஏற்கனவே உள்ளது போல் 50% பார்வையாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம் . விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஞாயிறு அன்று பால் , பெட்ரோல் , டீசல் , காய்கறி கடை வழக்கம் போல் செயல்படும் . உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்படும் . அதே நேரத்தில் ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

-சுரேந்தர்.

Comments