கலக்கத்தில் இருக்கும் காவலர்களின் கோரிக்கையை ஏற்குமா திமுக அரசு..!!

 

-MMH

           கொரோனா என்னும் கோரப்பிடியில் உலகமே அதிர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய காவல் துறையினரின் பணி மிகச் சிறந்தவை இந்நிலையில் காவலர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் விடுப்பும் சரிவர கிடைக்காததால் காவலர்கள் பெரும் மன உளைச்சலில் காணப்பட்டு வருகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்கள் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு ஊதியத்தை அரசு தவறாமல் வழங்கி வருவது என்றும் 24 மணி நேரமும் அயராது. தங்களது உயிரையும் துச்சமாக எண்ணி மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு சரி வர ஊதியம் கிடைப்பதில்லை என்றும் ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் என்றும் கூறுவதுடன் மன உளைச்சலில் உள்ளனர்.

அரசு தற்போது அறிவித்த ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க முடியாது என்ற அறிவிப்பு அரசுத் துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் காவல் துறையினர் மத்தியில் பெரிய வருத்தத்தையும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அரசுத் துறையினர் அனைவரும் 50 விழுக்காடு எண்ணிக்கையில் வேலை செய்கின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் கணக்கில்லாமல் விடுப்பில் உள்ளனர்.

மற்றும் ஆசிரியர்கள் 2020 ஆம் வருடம் முழுவதும் வீட்டில் இருந்தனர் 2021 ஆம் வருடமும் அதே நிலைமை தொடர்கிறது ஆனால் அவர்களுக்கும் முழு சம்பளம் மற்ற அனைத்து சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது. ஆனால் காலை முதல் இரவு வரை ஊர் அடங்கை அமல்படுத்த வெயிலிலும் மழையிலும் ரோட்டில் நின்று கொண்டிருக்கும் காவலர்களுக்கும் அதை நிலைதான். இதை விட என்ன பெரிய கொடுமை என்றால் முறையாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு கிடைக்காமல் நிறைய காவலர்கள் தவிப்பில் உள்ளனர்.

ரோட்டிலே பணியை செய்து கொண்டிருப்பதினால் தங்களது ஊதிய உயர்வை கூட கேட்டுப் பெறமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய அரசு பணியாளர்கள் கணக்கே இல்லாமல் விடுப்பில் உள்ளனர். ஆனால் சாலையில் தினம் செத்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர் எந்த ஒரு ஊதிய உயர்வு போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் அவர்களிடம் போய் கெஞ்சி,  பெறவேண்டியுள்ளது. 

சென்னை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் நிலைமை இன்னும் மோசம். எந்த ஒரு அரசாங்க பிரதி பலன்களும் இவர்களுக்கு  கிடைப்பது கிடையாது புலம்புகின்றனர். தமிழகத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ உதவியாளர்கள் என அனைவருக்கும் அரசு சமீபத்தில் ஊக்கத்தொகை அளித்தது. 

இது பாராட்டக்கூடிய விஷயம் தான், ஆனால் காவல்துறையினருக்கு எந்த ஒரு ஊக்கத் தொகையோ அல்லது ஒரு பாராட்டுதல் கூட அறிவிக்கவில்லை.என்றாலும் பரவாயில்லை.   ஏற்கனவே   ஈட்டிய விடுப்புக்குகனா ஊதியத்தையும்  அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க பட மாட்டாது என்றதால் காவலர்கள் அனைவரும் மனவேதனையில் உள்ளனர்.

மேலும் சிலர் எங்களுக்கு ஊக்கத்தொகையும் வேண்டாம் பாராட்டுதலும் வேண்டாம் மற்ற அரசாங்கப் பணிகளை போல நாங்களும் 50 விழுக்காடு பணி செய்ய அனுமதிக்க வேண்டும் இல்லையேல் சொந்த விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற குரல் காவலர்கள் மத்தியில் ஓங்கி வருகிறது. காவல்துறையினரின் குமுறல்களை திமுக அரசு கவனத்தில் கொள்ளுமா.

நாளைய வரலாறு செய்திக்காக

 -குமார்,ஊத்துக்குளி.ஈசா.

Comments