தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு பதவி ஏற்பு!! பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி!!

    -MMH

தமிழ்நாடு டிஜிபி திரிபாதி  ஓய்வு பெற்ற நிலையில் தமிழ்நாட்டின் 30ஆவது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றார். கன்னியாகுமரி குழித்துறையில் பிறந்த சைலேந்திரபாபு 1987 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி வேளாண்மை., எம்பிஏ., பிஎச்டி பட்டப்படிப்புகளை முடித்துள்ளார் சைலேந்திரபாபு. கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பி ஆகவும் அடையாறு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் ஐஜியாக முத்திரை பதித்தவர்.

முன்னதாக தமிழக காவல்துறையில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் தலைமை பதவியாக கருதப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக யாரை நியமிப்பது என தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்பு துறை டிஜிபி கரன் சின்ஹா மற்றும் டிஜிபி சஞ்சய் அரோரா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

ஏழு பேர் கொண்ட பரிசீலனை பட்டியலில் கரன் சின்ஹா, சைலேந்திரபாபு , சஞ்சய் அரோரா ஆகியோர் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகினர். இந்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக  தலைமைச் செயலாளர் இறையன்பு சைலேந்திரபாபு நியமிப்பதாக அறிவித்தார். சைலேந்திரபாபு ஐபிஎஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம் ,சாதிக்க ஆசைப்படு, உடலினை உறுதிசெய்ய உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஊடகவியலாளன், பத்திரிகையாளன் 

ஆர்.கே.பூபதி.

Comments