கொரோனா பாதித்த காவலர்களிடம் நலம் விசாரித்த திருச்சி மாவட்ட எஸ்.பி. மூர்த்தி..!! பொதுமக்கள் பாராட்டு...!!

     -MMH
    கொரோனா அலை பரவி வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பணியினை மேற்கொண்டு வந்தனர்.  

அதே சமயத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கும் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.மூர்த்தி இ.கா.ப.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம்  விசாரித்து ஆறுதல் கூறினார். 

மேலும்  காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களும் தங்களுடைய காவல் நிலையத்தில் பணிபுரியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறவும் , அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும்  கேட்டுக்கொண்டார்.

இதைப்பற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் கூறியதாவது:

காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி அவர்கள், எங்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் அவர் தனது அன்பை வெளிப்படுத்தி  நாங்கள் கொரோனா சிகிச்சை முடிந்த பின்பு சிறப்பாக பணிபுரிய ஊக்குவிக்கும் விதமாகவும் பேசினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்ட எஸ்.பி மூர்த்தி அவர்களின் எளிமைப் பண்பு அறிந்த பொதுமக்கள் அவருக்கு வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- ஊடகவியலாளன்,

பத்திரிகையாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments