அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தங்கை! அரிவாளால் சரமாரி வெட்டிய அண்ணன்!!

    -MMH

நெல்லை அருகே உள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. கூலித்தொழிலாளிஇவரது மனைவி பவானி. இவர்களுக்கு மாலைராஜா(22) என்ற மகனும், கவிதா(17) இருவரும் உண்டு. இதில் கவிதா பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலையில் வீட்டில் கவிதா செல்போனை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மாலைராஜா வந்தார். அவருக்கும் கவிதாவுக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த மாலைராஜா வீட்டில் இருந்த அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்தனர். அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டனர். 

கொலைக்கான காரணம் குறித்து முறப்பநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவியான கவிதா எப்போதும் செல்போனில் கேம் விளையாடுவது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் செல்போனை பார்த்து கொண்டு இருந்ததால் அண்ணன் மாலைராஜா கண்டித்ததாக தெரிகிறது.

நேற்றும் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் கவிதா செல்போனை பார்த்து கொண்டு இருந்தார். இதில் ஆத்திரமடைந்த மாலைராஜா வீட்டில் இருந்த அரிவாளால் கவிதாவின் கை, கால், வாய் உள்ளிட்ட 25 இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது. 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-வேல்முருகன், தூத்துக்குடி. ஈசா.

Comments