காதலால் வாலிபருக்கு வந்த சோதனை!!

    -MMH
     கோவை:ஆர்.எஸ்.புரம், தெப்பகுளத்தை சேர்ந்தவர் சுபாஷ்(25) காய்கறி வியாபாரி. இவர் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த, 19 வயது பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் அண்ணணுக்கு தெரிந்து கண்டித்தார். 

ஆனால், தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததால். பெண்ணின் அண்ணணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அங்குள்ள பேக்கரி அருகில் நின்றுகொண்டு இருந்த சுபாசை நண்பருடன் வந்த இளம்பெண்ணின் அண்ணன் மற்றும் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து சுபாசை தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். படுகாயமடைந்த சுபாசை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஆர்.எஸ்., புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments