கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை!!

    -MMH

     17 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது. 10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளது. அந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு ஒரு சில தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள142 அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்க தமிழக அரசு திட்டம்.

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது.

அரியலூர் தர்மபுரி சிவகங்கை பெரம்பலூர் கரூர் தென்காசி வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு மதுரை, திருப்பூர்,  தஞ்சாவூர் , திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடரும் என தகவல்

புதியதாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களான சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய தளர்வுகள் வழங்கப்பட உள்ளது

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments