கோவையில் முகாமிட்டுள்ள தமிழக தலைமை செயலாளர்..!!

 

-MMH

       கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு கோவையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது சென்னையில் கொரோனா பரவல் அதிகம் காணப்பட்டது. தற்போது இரண்டாம் அலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிப்பு கண்டறியப்படும் மாவட்டமாக கோவை மாறியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் பயனின்றி உள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அதிகாரி ஜெகநாதன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன். I.அனஸ்.

Comments