கிணத்துக்கடவு அருகே விவசாயிகள் போராட்டம் !!

 

-MMH

      கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் செயல்பட்டு வரும் கல்குவாரியை முற்றுகையிட்டு விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு அருகே வீரப்ப கவுண்டனூரில் கேரள மாநிலத்தை சேர்ந்த திலிப் குமாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அத்துடன் வீரப்பகவுண்டனூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், கணேசமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் மதுகண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி  உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments