கோவையில் கொரோனா புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார் !!

 

-MMH 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்‌ தொற்றினை கட்டுப்படுத்தவும்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசால்‌ ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால்‌ ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடு‌ கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள்‌ கடந்த 1ம் தேதி முதல்‌ விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கோவை மாவட்டத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று அதிகரித்து வரும்‌ நிலையில்‌ நாளை (16ம் தேதி) முதல்‌ கீழ்க்கண்ட தளர்வுகள்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள அத்தியாவசிய கடைகளான பால்‌, மருந்தகம்‌, காய்கறி கடைகள்‌, மளிகைக் கடைகள்‌ நீங்கலாக) தவிர மற்ற கடைகள்‌ / சந்தைகள்‌ அனைத்தும்‌ ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து உணவகங்கள்‌, அடுமனைகள்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை பார்சல்‌ சேவைக்கு மட்டும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து பன்னடுக்கு வணிக வளாகங்கள்‌ (Malls), திரையரங்குகள்‌, பூங்காக்கள்‌ மற்றும்‌ சுற்றுலா தளங்கள்‌ ஞாயிற்றுக்கிழமை மட்டும்‌ இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில்‌ மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும்‌ அனுமதி மற்றும்‌ 50 சதவிகித கடைகள்‌ சுழற்சி முறையில்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும்‌, உழவர்‌ சந்தைகள்‌ சுழற்சி முறையில்‌ 50 சதவிகித கடைகளுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும்‌ ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்‌.

பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர்‌ வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கு அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தைகளில்‌ வெளி மாவட்ட / மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்‌ கலந்து கொள்ளமல்‌ இருப்பதை சார்‌ ஆட்சியர்‌ / நகராட்சி ஆணையர்‌ இதனை உறுதிப்படுத்த வேண்டும்‌.

மாவட்டத்தில்‌ இதுவரை 82% மேல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20ம் தேதி முதல்‌ அனைத்து வணிக வளாகங்கள்‌ துணிக்கடைகள்‌, நகை கடைகள்‌ மற்றும்‌ இதர கடைகளில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல்‌ தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும்‌. மேலும்‌, வாடிக்கையாளர்கள்‌ கொரோனா தடுப்பூசி முதல்‌ தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌ கடை உரிமையாளர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டியது அனைத்து பொதுமக்களின்‌ கடமையாகும்‌. மக்கள்‌ அனைவரும்‌ தமிழ்நாடு அரசு மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்தால்‌ (அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை” பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்.

-பீர் முகம்மது.

Comments