போத்தனூர் ஸ்ரீராம் நகரில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய மருதமலை சேனாதிபதி... மக்கள் மகிழ்ச்சி..!!
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீ ராம் நகர் பகுதியில் தமிழக முதல்வர் அவர்களின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருள் வழங்குதல் திட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி பல மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனடிப்படையில் பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் வீடுவீடாக ரேஷன் அட்டைதாரர்கள் கணக்கெடுக்கப்பட்டு, டோக்கன் வழங்கி, உணவுப் பொருள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது.
அதன் தொடர் நிகழ்வாக கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோடு 99 வது வார்டு ஸ்ரீராம் நகர் அருள்முருகன் நகர் பகுதியில் 99 வது வார்டு பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று காலை பதினொன்று முப்பது மணி அளவில் டோக்கன் விநியோகிக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் நிவாரணப் பொருள் சிறப்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய குறிச்சி வடக்கு பகுதி கழக பொறுப்பாளர் எஸ் ஏ காதர் அவர்கள் வரவேற்புரை 99 வாது அ. வட்ட பொறுப்பாளர் என்.சம்சுதீன் 99 வது வட்ட பொறுப்பாளர்கள் முரளிதரன் முகமது அலி ஜின்னா ரேஷன் கடை நடராஜன் ஆகியோர் முன்னிலையில் கோவை கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி அவர்கள் கொரோனா நிவாரண பொருட்கள்ஸ்ரீராம் நகர் அருள்முருகன் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வழங்கினார்.
மற்றும் குறிச்சி வடக்கு கிழக்கு வட்ட பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு மன மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-தமிழக தலைமை நிருபர்
-ஈசா.
Comments