ரயில் தண்டவாள பணி மேற்கொள்ளும் மேலாளர் பணியாளர்கள் கண் முன்னே ரயிலில் அடிப்பட்டு பலி!!

   -MMH

  கோவை: ரயில் தண்டவாள பணி மேற்கொள்ளும் மேலாளர் பணியாளர்கள் கண் முன்னே ரயிலில்  அடிப்பட்டு பலி. 

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் மணிக்குட்டன்(50). போத்தனூர் - பாலக்காடு ரயில்வே தண்டவாளம் மற்றும் அருகே உள்ள பணிகளை மேற்கொள்ளும் கேரளா நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம் போல பணிக்கு வந்த அவர் ரயில்வே தண்டவளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஊழியர்களுக்கு சொல்லிக்கொண்டிருத்த போது ஒரு தண்டவளத்தில் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் வேறொரு தண்டவாளத்தில் வருவதாக கவனக்குறைவுடன் இருந்த அவர் ரயில் மிக அருகில் வந்தவுடன் தான் நிற்கும் தண்டவாளத்தில் வருவதை தெரிந்து கொண்டு அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்திற்கு மாறியுள்ளார். அப்போது அத்தண்டவாளத்தில் பாலக்காடு நோக்கிச் சென்ற சபரி விரைவு ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீஸார் மணிகுட்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். உயிரிழந்த மணிகுட்டனுக்கு அவரது வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் கண் முன்னே மேலாளர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- சீனி,போத்தனூர்.

Comments