SDPI கட்சியின் கோவை தெற்கு மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!!

     -MMH

SDPI கட்சியின் கோவை தெற்கு மாவட்ட பொதுக்குழு மற்றும் தேர்தல் பொள்ளாச்சி ஆனைமலையில் ஞாயிற்றுக்கிழமை 12.09.2021 காலை 11.00மணி அளவில்  முன்னாள் மாவட்டத் தலைவர் A.S.A பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் S.N.சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார். பின்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக மாநில தேர்தல் பொறுப்பாளர் A.S.ஷஃபீக் அஹமது, ஈரோடு மாவட்டத் தலைவர் ப.முஹம்மது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்கள்.

கோவை தெற்கு மாவட்டத்திற்கான புதிய மாவட்டத் தலைவராக A.S.A. பீர் முகம்மது, மாவட்ட பொதுச்செயலாளராக J. இக்பால், மாவட்ட பொருளாளராக A.N. முஹம்மது ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட துணைத் தலைவராக S.M.சிக்கந்தர் , மாவட்ட  செயலாளராக M.அக்பர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக K.M.ஜெய்லாப்தீன், A.நாசர், மாநில பொதுக்குழு உறுப்பினராக S.K.நிஜாம்தீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக மாவட்ட  செயலாளர் M.அக்பர் அலி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

-M.சுரேஷ்குமார்.

Comments