கோவை அரசு பேருந்து ஜப்தி!!

     -MMH

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 40). இறைச்சி வியாபாரி. இவர் கடந்த 21.2.2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு வழங்கக் கோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள 3-வது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது இப்ராகிம் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்து 86 ஆயிரம் நஷ்டஈடு தொகையாக வழங்க உத்தரவிட்டார். இந்த நஷ்டஈடு தொகை ஒரு குடும்பத்திற்கு தராததால் இறைச்சி வியாபாரியின் உறவினர்கள் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய  உத்தரவிட்டார். அதன்பேரில் கோவை-மேட்டுப் பாளையம் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments