ஊட்டி மலை ரயில் 15ஆம் தேதி வரை நிறுத்தம்! ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்! ! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்! !!

  -MMH

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர், பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி கல்லாறு -அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே மலை ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்தன.

இதையடுத்து அந்த பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. ஆனால் ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முடியாததால் கடந்த 23-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.  

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்வதால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. அதை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மேட்டுப்பாளையம் -ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments