எஸ்டேட் தொழிற்சாலைக்கு அருகில் நடமாடும் சிறுத்தை கூட்டத்தால் மக்கள் பீதி! வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகப்படியான எஸ்டேட்களும் தேயிலை தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் இந்த எஸ்டேட் களில் அடிக்கடி பல்வேறு வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது.
இந்த சூழ்நிலையில் முத்து முடி டீ பேக்டரி அருகே சிறுத்தை கூட்டம் ஒன்று சாலையில் உலா வந்து உள்ளது இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் எனவே வனத்துறையினர் உடனடியாக இந்த சிறுத்தை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-S.ராஜேந்திரன், திவ்யா குமார் வால்பாறை.
Comments