இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!!

      -MMH 

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு 26.11.2021 அன்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள், தலைமையில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள், மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அரசமைப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முகப்புரை:  இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும் சமயச் சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும். அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும்

தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments