நடிகர் விஜய் சேதுபதி விவகாரம். கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு.!

   -MMH 

  நடிகர் விஜய் சேதுபதி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ஜுன் சம்பத் பதிவிட்டது அமைதியை தூண்டும் விதமாக உள்ளது என கோவை மாநகர போலீசார் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: -

"கடந்த 7ஆம் தேதி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதாக அவரை உதைப்பவருக்கு ரொக்க பரிசு 1001 வழங்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேற்படி பதிவானது அமைதி மீறுதலை தூண்டும் விதமாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே பி1 கடைவீதி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் 504, 506( 1 )படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது."

இவ்வாறு காவல் துறை செய்தி குறிப்பிட்டுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments