உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேட்டி சேலை, உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது!!

   -MMH 

   கோவை செல்வபுரம் பகுதியில் உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேட்டி சேலை, உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

கோவை செல்வபுரம் சிஜிவி நகர் பகுதியில் உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை தலைவர் நாகூர் மீரான் தலைமையிலும்,பகுதி செயலாளர் கேபிள் மணி 79வது வார்டு பொறுப்பாளர் பழனிசாமி முன்னிலையிலும் முதியோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டன. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கே.ஆர் பழனிச்சாமி கலந்துகொண்டார். மேலும்   தில்லைநகரை சேர்ந்த ஏராளமானோர் இந்நிகழ்ச்சயில் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.


Comments