99 வது வார்டு வேட்பாளர் ரபிக் செய்த பணிகளை முன்வைத்து மக்களிடையே வாக்கு சேகரிப்பு..!!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி 99 வது வார்டில் களமிறங்கிய ரஃபிக் பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின்போது மக்களுக்கு பல நற்பணிகளை பெற்று தந்துள்ளார் என்று கூறும் மக்கள்.
ஸ்ரீராம் நகர், செட்டிபாளையம் சாலை, வெள்ளலூர் சாலை, மேட்டுத்தோட்டம், எவரெஸ்ட் காலனி, சர்ச்சு சாலை, நூராபாத், மற்றும் இந்தப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தானாக முன்வந்து தெரிவித்த கருத்துக்கள்,
அனைத்து தர மக்களுக்கும் முதியோர் பென்ஷன் மின்விளக்கு சாக்கடை சுத்தம் செய்தல் குப்பை அகற்றுதல் தார்சாலை வசதி தண்ணீர் வசதி வீட்டு மனை பட்டா போன்ற திட்டங்களை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி யுடன் இணைந்து சிறந்த முறையில் எங்கள் பகுதிக்கு வழங்கி உள்ளார்.அதிமுக வேட்பாளர் ரபிக்கின் வாக்குறுதிகள்:அதிமுக வில் பகுதி செயலாளரான நான் 99 வது வார்டில். நான் வெற்றி பெற்றால் நல்ல குடிநீர் வழங்குவேன் தார்சாலை மின்விளக்கு குடிநீர் பிரச்சினை 99 வார்டில் குப்பை பிரச்சனை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னெடுத்து மக்களுக்கு பணியாற்றுவேன். என்று உறுதியளிக்கிறேன். என்று கூறியுள்ளார்.
மற்றும் திமுக இதர கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கிய 99 வது வார்டில் ரஃபீக் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று அக்கட்சி நிர்வாகிகளும், மக்களும் கூறி வருகின்றனர்.நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா. ராஜேந்திரன்.
Comments