கோவை வாலாங்குலத்தி் ல் லேசர் விளக்கு திறப்பு !!
கோவை விழா 2022 முன்னிட்டு உக்கடம் வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளிக் காட்சியினை, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V. செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மாநகரக் காவல் ஆணையாளர் பிரதீப்குமார் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் இராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், நா.கார்த்திக் Ex.MLA., மண்டல குழுத்தலைவர்கள், நிலைக் குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கோவை விழா குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments