கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் துவக்கி வைத்தனர்!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்.BE அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் Ex.MLA அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மடக்குளம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் K.ஈஸ்வரசாமி மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரங்கநாதன் மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஒன்றிய கழக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மடத்துகுளம் பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-துல்கர்னி உடுமலை.
Comments