பொள்ளாச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம்...!!!

   -MMH 

   2009ஆம் ஆண்டு சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் வெல்ஃபேர் கட்சி, தமிழரசுகட்சி, தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம் ஒருங்கிணைப்பில் பொள்ளாச்சி அண்ணா பேருந்து நிலையம் முன்பு நேற்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலஅரசியல் கட்சியினர், மற்றும் சமூக இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments