ஆனைமலை ஆலம்விழுது குழுவினரின்146வது வாரக் களப்பணி....!!!

   -MMH 

   ஆனைமலை ஆலம் விழுது குழுவின் சார்பாக 'ஊர்கூடி மரம் வளர்ப்போம் உலகை பசுமையாகவும் வைப்ப்போம்' என்ற சிந்தனை அடிப்படையில் ஆலம் விழுது குழுவினரின் 146-வார களப்பணி ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலையில் மாக்கினாம்பட்டி அருள் ஜோதிநகர் சிறுவர் பூங்காவில் நடைபெற்றது. 

இந்த பணியில் சுபி நாகராஜன்  அவர்களின் வழிகாட்டுதலுடன் மற்றும்  மாக்கினாம்பட்டி ஊராட்சி மன்ற  தலைவர் அழகிரிராஜா மற்றும் ஆனைமலை ஆலம் விழுது குழுவின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் இவர்களுடன் ஆலம் விழுது குழுவினர்கள், பொதுமக்கள் என  அனைவரும் சேர்ந்து மகிழம்,புங்கன்,கொய்யா,பாதாம்,இலுப்பை போன்ற மரக்கன்றுகளை நாட்டினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments