சிறுத்தை பிடியில் இருந்து தப்பிய நான்கு வயது குழந்தை!!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள மழுக்க பாறை எஸ்டேட் பகுதியில் மூன்றாவது பிரிவில் அருகாமையில் உள்ள வீரன்குடியில் வசித்து வரும் பேபி, ராதிகா அவர்களின் நான்கு வயது மகன் ராகுல் நேற்று இரவு நேரத்தில் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு நேரத்தில் உள்ளே புகுந்த சிறுத்தைக் குட்டி தகப்பனார் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவனை கவ்வியது. சத்தத்தை கேட்ட தகப்பனார் உடனே சிறுத்தைக் குட்டியை விரட்டினார். குழந்தையை லேசான காயத்துடன் வழுக்கப் பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சிகிச்சை பெற்றனர்.

அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக சாலக்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்ட வசமாகத்தான் சிறுவன் உயிர் தப்பியுள்ளது. 

அப்பகுதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கவனமாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் கூறி வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். பொது மக்கள் கவனமாக இருக்கவும் எச்சரித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments