கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் செவாலியர் டாக்டர் சிவாஜியின் 21 வது நினைவுதினம் நடைபெற்றது.

 

    -MMH 

   கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கலைப்பிரிவு சார்பில் செவாலியர் டாக்டர் சிவாஜியின் 21வது நினைவுதினம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .நிகழ்ச்சியில் சிறப்பு அண்ணதானத்தை மாமன்ற உறுப்பினர்கள் PS.சரவணக்குமார், அழகுஜெயபால்,காயத்திரி, கணபதி பகுதி திமுக செயலாளர் கோவை லோகு ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்கள். மேலும் இந்த நிகழ்வில் கலைப் பிரிவு தலைவர் பறக்கும்படை ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னிலை பி.எஸ்.முத்துமார் ,அரிமா கருப்புசாமி,தென்றல் நாகராஜ் ,ஆர்.கே .ரவி,ரூபர்ட் துளசி ராஜ்,கோவை ராதா,கிருஷ்ணவேணி,பாசமலர் சண்முகம்,மாநில துணைத்தலைவர் பழையூர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சௌந்தர் குமார், தொழிற்சங்க தலைவர் ராஜா பழனிச்சாமி, காமராஜ்,  பெரியநாயக்கன் பாளையம் சிவாஜி ரவி, கோவை ராதா,கோவை பாலாஜி டென்னிஸ், செல்வராஜ் ,சங்கனூர் கோபால், லாலா சங்கரன், சிவாஜி சுப்பிரமணியம் , ரமேஷ், முத்துசாமி ,எல்ஐசி நாகராஜ் ,ராமநாதபுரம் நாகராஜ், காமராஜ், துல்லா மற்றும் காங்கிரஸ் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments