சிறுமுகை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது!!

    -MMH 

     கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் நேற்று முன்தினம் இரவு சிறு முகை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்த போது  காரில் வந்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி திருமலைச் செல்வனிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து திருமலைச்செல்வன் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக காருடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, வீராசாமி, நந்தகுமார் என்பதும், அவர்கள் தான் திருமலைச்செல்வனிடம் பணம் பறித்தும் தெரியவந்தது. உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments