இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்த 7அகதிகளை கடலோர காவல் படை மீட்பு!!

    -MMH 

தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர். இவர்களிடம் காவல்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 100 க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். 

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த 2 குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3வது மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர். மணல்திட்டில் தவித்த 7 அகதிகளையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ஏற்றி வந்து ராமேஸ்வரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சையது காதர்.

Comments