கோவை காந்திபுரம் பகுதியில் கஞ்சா பறிமுதல் ! காவல்துறையினர் நடவடிக்கை!!

 

கோவை பஸ் ஸ்டாண்டில், 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், திண்டுக்கல் வாலிபர்கள் மூவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, மூன்று லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், காட்டூர் போலீசார் நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபரை விசாரித்ததில், திண்டுக்கல்லை சேர்ந்த கஞ்சா வியாபாரி பிரவீன், 28, என்பது தெரிந்தது.மேலும் அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த, திண்டுக்கல் தர்மராஜ், 27, சதீஷ்குமார், 29, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கஞ்சாவை வாங்கி வந்து, கோவையில் அதிக விலைக்கு இந்த மூவரும் விற்பது தெரிந்தது.அவர்களிடம் இருந்து 28 கிலோ கஞ்சா, மூன்று லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் உள்ளோரை பிடிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments