பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் வழங்கும் நவீன எந்திரம்!!

 -MMH 

கோவை ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் வழங்கும் நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் மற்றும் குளிர்பான காலி பாட்டில்களை ஆங்காங்கே சிலர் தூக்கி வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது இதனை தடுக்க கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடை மேடையில் ஒரு நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. 

அதில் காலி பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முகக்கவசம் வரும் அதை எடுத்து இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். முகக்கவசம் வேண்டாம் என்றால், நமது எடையை சரிபார்த்துக் கொள்ளும் வசதியும்  அதில் உள்ளது

இந்த நவீன எந்திரம் காலி பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் அது 30 வினாடிக்குள் தூளாகி விடும் இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க அந்த எந்திரம் உதவுவதாக ரெயில்நிலைய அதிகாரிகள்  கூறுகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments