தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு!!

      -MMH 

    கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறுகிறதா என நகராட்சி மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு, முன்னாள் நகரமன்ற செல்வம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் தூய்மை பணியாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

வேலை செய்யும் இடங்களில் தூய்மை  பணியாளர்களுக்கு முக கவசம் கை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட உரிய பாதுகாப்புடன்  செயல்பட வேண்டும் என தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார்.

Comments