கல்வித்துறை அமைச்சர் திருப்பூரில்!!
தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் திருப்பூரில் உள்ள ஜெய்வா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென ஆய்வு செய்ய வந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிகள் திட்டமும் சரி வளர்ச்சியும் சரி அதிகரித்து உள்ளது.
மக்களும் அதிக அளவில் அரசு பள்ளியை நாடி வருகின்றனர் தற்போது அன்பில் மகேஷ் அவர்கள் கூலித் தொழிலாளிகள் குளம் தேய்ந்த தொழிலாளர்கள் அவர்களை கணக்கெடுத்து அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு உண்டான முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சியில் திருப்பூர் மேயர் எம் எல் ஏ மற்றும் கழக உறுப்பினர்கள் தொண்டர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் பேண்ட் வாத்தியம் வாசித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கல்வியின் தரத்தையும் பள்ளியின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் பல பள்ளிகளை ஆய்வு செய்து மேம்பட தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.
Comments