மாணவியருக்கு பாலியல் தொல்லை!! ஐந்தாண்டு சிறை!!

 -MMH 

கோவை, வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் ஆசிக், 24. இவர் 2017ல், கோவையில் மாணவியர் இருவரை ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியர் இருவர் அங்கிருந்து தப்பி கோவை வந்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.புகாரின் பேரில், போலீசார் விசாரித்து ஆசிக்கை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நேற்று முடி வடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிக்கிற்கு மாணவிகளை கடத்திச்சென்ற பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தொல்லை கொடுத்த போக்சோ பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments