கோவை சவேரியர்பாளையம் அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

    -MMH 

   கோவை சவேரியர்பாளையம் அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. விழாவை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு காலைசிற்றுண்டி, பழங்கள் மற்றும் பிஸ்கெட் வழங்கப்பட்டது.

பன்னாட்டு அரிமா சங்கம் 324 சி மாவட்டம் சார்பாக பசிப்பிணி போக்குவது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,கல்வி உதவி தொகை என பல்வேறு சமுதாய நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இதன் கீழ் வரும் கோவை சவேரியர்பாளையம் அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் பழங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சவேரியர்பாளையம் அரிமா சங்கத்தின் தலைவர்  கர்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் செயலாளர் அட்மின் மெய்யநாதன், செயலாளர் செயல் ஜாஃபர் அலி மற்றும் பொருளாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் PMJF S. ராம்குமார் கலந்து கொண்டு உணவு,பழங்கள்,பிஸ்கட் போன்ற உணவு வகைகளை வழங்கினார். 

இதில் அரசு மருத்துவமனையில் உள்ள தாய்,சேய் நல விடுதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள நோயாளிகள்,பொதுமக்கள் என சுமார் ஐநூறு பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர்  கோவிந்தராஜ் மற்றும் வட்டாரத் தலைவர் அரிமா.செந்தில்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரோஜாமண்டல தலைவர் மணிவண்ணன், மாவட்ட இணைச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இன்ஜினியர்  ராஜ்மோகன், ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் அட்மின்  சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் (திட்டம்) கனகராஜ்,சக்சஸ் சந்திரன், குபேந்திரன், உதயகுமார், கிரிதரன், மனோகர், ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments