உடுமலை அருகே விவசாயிகள் சங்க மாநாடு! முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

 

    -MMH 

    உடுமலையை அடுத்துள்ள கரட்டுமடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய அளவிலான மாநாடு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைவர் ஏ.ராஜகோபால் தலைமை வகித்தார். ஆனைமலையாறு-நல்லாறு அணைத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். உர விலையை கட்டுப் படுத்த வேண்டும், தென்னை தொடர்பான தொழில்களை காப்பாற்ற வேண்டும்.மாட்டுப் பால் ரூ.42 க்கும், எருமைப் பால் ரூ.50 க்கும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதணன், ஏ.பாலதண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பிரதீப்குமார், தாராபுரம்.

Comments