கந்து வட்டி கும்பல் மீது வழக்கு!!

    -MMH 

    கோவை சொக்கம்புதூர் கருப்பண்ணபாதையை சேர்ந்தவர் சிந்து (வயது 30). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

சிந்து தான் வாங்கிய பணத்திற்கு வட்டியும் முதலும் கட்டி முடித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சிந்துவிடும் கூடுதல் வட்டி தொகையை தருமாறு கேட்டு ஈஸ்வரி பிரச்சினை செய்து வந்தார்.இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சிந்து வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஈஸ்வரி மற்றும் திருநங்கைகள் 3 பேர் சிந்துவிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி மற்றும் 3 திருநங்கைகள் சேர்ந்து சிந்து மற்றும் அவரது தாய் சுனிதா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.இதுகுறித்த  சிந்து ஈஸ்வரி மற்றும் மூன்று திருநங்கைகள் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்   இந்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments